கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி 100% சாதனை

சி.பி.எஸ்.இ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
தேர்வு எழுதிய மாணவ மாணவியர் 32 பேரில், சி.வி. மௌனிஷா 480/500 மதிப்பெண்களும், எம். சரவணவேல் 474/500 , எம்.ஒய். யுவஷிகா 469/500 மதிப்பெண்களும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
எஸ். கார்த்திகேயன், பொருளாதாரம் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், துணைச் செயலர் ஞானபண்டிதன், பள்ளி முதுநிலை முதல்வர் நல்லாசிரியர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் திருமதி உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.