கோவையில், ஜவுளிக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

கோவை, பீளமேடு எஸ்டிவி நகரைச் சேர்ந்தவர் பிரதீஷ்(29). இவர் அவிநாசி ரோடு நவஇந்தியாவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை கடையை திறந்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். திங்கட்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.23,500 மற்றும் துணிகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீஷ் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.