கோவை அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

கோவை, ரத்தினபுரி முத்துக்குமார் நகர் 2வது வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (28). இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். பிரவீன்குமார் கடந்த 8 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார்.

ஆனால், இளம்பெண் அவரது பெற்றோரின் கட்டாயத்தால், வேறொருவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தாக தெரிகிறது. இத்தகவல் பிரவீன்குமாருக்கு தெரியவந்தது. இதனால், அவர் தனது காதலியை மறக்க முடியாமல் பரிதவித்து வந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரவீன்குமார் திங்கட்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் பிரவீன்குமார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.