சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் பள்ளியில் படிக்கும், 14 வயது சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாருக்கு எஸ்.பி., பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறுமியின் தந்தையை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட போலீசார் எச்சரித்து உள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை கோவை மாவட்டத்தில் 6 போக்சோ கைதிகள் உள்பட 23 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.