கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரியில் யோகா தினம்

கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி யோகாசனத்தின் சிறப்பினை விளக்கினார். ஸ்கை யோகாவின் பேராசிரியர் ரபிந்தரனாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகாவின் முக்கியத்துவத்தை பற்றியும், யோகாவின் மகத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இவரது உறையின் மூலம் செவிலியர்கள் யோகாவின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டனர்.

பின்னர் கே.எம்‌ச்.எச். செவிலியர் கல்லூரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு இளநிலை செவிலியர் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கற்றுக்கொண்ட யோகாசனங்களை (தனுராசனம், பத்மாசனம், புஜங்காசனம், சூரிய நமஸ்காரம்) போன்றவற்றை செய்முறை வடிவில் அரங்கேற்றினார்கள்.