மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்

தமிழகம் முழுவதும் 10,11,12 ஆம் வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்  நடத்தக் கோரி தமிழக கல்வி துறை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடந்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இவ்வகுப்புகள் மாலை 5 முதல் 5:30 மணி வரை நடத்தலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இவ்வறிக்கையை  அனுப்பியுள்ளது.