100 ஆண்டு வாழ 100க்குள் வாழுங்கள்..!

‘நமது உடலில் கண், காது, வாய், நுரையீரல், மண்ணீரல், கல்லீரல் என மொத்தம் 150 உறுப்புகள் உள்ளன. அதில் முக்கியமானது, இதயம். இதயம் சுருங்கி விரியும்போது உடல் முழுக்க இரத்தம் செல்கிறது. இது மெதுவாக இயங்கினால் மாரடைப்பு ஏற்பட்டுவிடும்.

இதயம், ஒரு கோவில் போன்றது. இதயத்தை பாதுகாத்தால் 100 ஆண்டுகள் வாழலாம். 100 ஆண்டு வாழ வேண்டும் என்றால், 100 சதவீதம் கெட்டப் பழக்கங்கள் இருக்கக் கூடாது. இரத்த அழுத்தம், உடலில் சர்க்கரை அளவு 100க்குள் இருக்க வேண்டும். நோய் வராமல் தடுக்க நாம் உடல் நலத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

எந்தக் குடும்பம் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக வாழ்கிறார்களோ அது நல்ல குடும்பம் என்பார்கள். நல்ல குடும்பத்தில் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் குடும்பத்தில் மாரடைப்பு பிரச்னைகள் வராது. உலகில் அதிக அளவு சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு, இந்தியா. இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. கஷ்டப்பட்டு நாம் வருவாய் ஈட்டி மருத்துவரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதேபோல்தான் இதய பாதிப்புகளும் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அதில் 8 லட்சம் பேர் மரணிக்கின்றனர் என்கிறது ஆய்வு. இந்தியாவில் துல்லியமான ஆய்வு முடிவுகள் இல்லை.

இந்தியாவிலும் அமெரிக்கா போன்றே நடக்க வாய்ப்புகள் உள்ளன. அது நடக்காமல் இருக்க நீங்கள் நடங்கள். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், இதயத்தை பாதுகாத்திடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்றார்.

மேம்பட்ட பொதுநல மருத்துவ சிகிச்சை!

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் பொது நல மருத்துவர் சாமுவேல் விஜயகுமார் கூறுகையில்,

‘பொது மருத்துவத்தை உள் மருத்துவம் என்றும் கூறலாம். இது உடலின் உள் உறுப்புகளுடன் தொடர்புடைய நோய்களுக்கான தடுப்பு முறை, நோய்களைக் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் ஆகியவற்றைக் கையாளும் மருத்துவத்தில் ஒன்றாகும். இதுபோன்ற பொது மருத்துவத்தில் அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் எங்கள் மருத்துவமனையில் தரப்படுகின்றன.

இதயம், நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளில் வரும் நோயாளிகளுக்கு, முதலில் பொது மருத்துவம் அளிக்கப்பட்டு பின்னர் அவரவர் நோய்களின் தீவிரத்தைப் பொருத்து தகுந்த மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். எங்கள் சிறப்பு நிபுணர்கள், அவர்களது துறையின் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றனர்.

இதய நிபுணர், இதய நோய்களையும், கண் மருத்துவர், கண் பிரச்னைகளையும் ஆராய்ந்து சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் பொதுநல மருத்துவர், தலை முதல் கால் வரை உள்ள அனைத்திற்கும் சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டவர்கள். தலை வலி, காய்ச்சல், மூட்டு வலி, கை கால் முறிவு, தீக்காயங்கள் என எல்லாவித பிரச்னைகளுக்கும் மக்கள் முதலில் அணுகுவது பொது நல மருத்துவரையே.

இதனைக் கருத்தில்கொண்டு, கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டருக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்புடன் கூடிய மருத்துவ சேவைகளை வழங்குகிறோம். ஆகையால் நீங்களும் உங்கள் உடல் நலம் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள எங்களை அணுகுங்கள்’ என்றார்.

ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை அவசியம்..!

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் கண் மருத்துவர் ராம் பிரியா கூறியதாவது,

‘குழந்தைகளுக்கு கண் பரிசோதனையை 3 வயதில் செய்ய வேண்டும். கண் வலி, படிப்பில் நாட்டமில்லை, தலை வலி உள்ளிட்ட அறிகுறிகள் மூலமாக குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

கண் பார்வை அதிகரிக்க விட்டமின் ’ஏ’ அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு போகப்போக கண் பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரில் நடத்தப்படும் இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை அறுவைச் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதில் பங்கேற்று பயன்பெறுங்கள்’ என்றார்.

No1 உயிர்கொல்லி: மாரடைப்பு

பிரச்னைகள் குறித்து கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டர் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் கூறியதாவது,

‘உலகிலேயே உயிர்க்கொல்லி நோய்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, மாரடைப்பு. இதயம் மற்றும் இரத்தக்குழாய் தொடர்பானவற்றில் மூன்று நோய்கள் அடங்கும். அவை, மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் ஸ்ட்ரோக். இந்த நோய்களால் வருடத்திற்கு 1 கோடி 80 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்நோய்களுக்கான காரணம் உடல் மற்றும் உளவியல் (மன) ரீதியானவை.

புகைப்பிடித்தல், கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், குடும்ப வரலாறு போன்றவை உடல் ரீதியான காரணங்களாகும். கவலை, கோபம், தூக்கமின்மை, சரியாக உணவு உட்கொள்ளாமை, மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியன உளவியல் சார்ந்த பிரச்னைகளாகும்.

உணவு என்பது வயிற்றுக்கு மட்டுமின்றி மனதிற்கும் சேர்ந்ததாகும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை தினசரி சரியாக செய்தாலும் மன உளைச்சல், கவலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் மாரடைப்பு ஏற்படும். எனவே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

புகையிலை, பான்பராக், ஹான்ஸ், கூலிப், சிகரெட் பயன்படுத்தினால்தானே புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வரும். மூக்குப்பொடி பயன்படுத்தினால் தவறில்லை என்கின்றனர். இந்த எண்ணம் தவறு. நச்சுப்பொருட்களை எந்த வகையில் பயன்படுத்தினாலும் அவை நஞ்சுதான்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் தின்றே வாழ வேண்டும் என்பது உண்மை இல்லை. சர்க்கரை நோய் என்பது உங்கள் கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களில் இருந்து உற்பத்தியாகும் இன்சுலின் குறைபாடாகும்.

இந்த நோய் இதய பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதயம் சார்ந்த எந்த பிரச்னை, சந்தேகங்களுக்கு உடனடியாக எங்கள் கே.ஜி. மருத்துவமனையை அணுகி சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று நலமுடன் வாழுங்கள்” என்றார்.

குறட்டையில்லா தூக்கமே ஆரோக்கியம்

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் நுரையீரல் நிபுணர் (பல்மனாலஜிஸ்ட்) ஜெயக்குமார் கூறுகையில், ‘நுரையீரலில் ஏற்படக்கூடிய அனைத்து வகைத் தொற்று, ஒவ்வாமை, சுவாசப் பிரச்னைகள், புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனையின்பேரில் நுரையீரல் நிபுணரை சந்திக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரான்சோபல்மனரி டிஸ்லெப்சியா, நீண்டகால சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட் (றிதிஜி), இரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் நுரையீரல் நோய் தீவிரத்தைக் கண்டறிந்து இன்ஹேலர் மற்றும் நோய்த் தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நுரையீரல் தொற்று, பருவகாலத் தொற்று மற்றும் இன்ஃப்ளுயென்சா போன்ற நுரையீரல் தொற்றுகளுக்கும் எளிமையான மருந்துகள், தேவையான பரிசோதனைகள் செய்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

நுரையீரல் நோய் வராமல் தடுக்க, குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். புகைப்பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் அது அவருக்கு மட்டுமல்லாமல் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேலை செய்யும் இடங்களில் தூசி அதிகம் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு, குறட்டை தொந்தரவுகள் இருக்கும். குறட்டை அதிகம் விடுவதால், சராசரி தூக்க அளவு பாதிப்புடன், நுரையீரல் செயல்திறனும் பாதிக்கும். இது அப்ஸ்டிருக்ட்டிவ் ஸ்லீப் ஆஃப்னியா எனப்படும். இதற்கு தொண்டையில் வளரக்கூடிய சதையே காரணமாகும். இவ்வாறு சதை வளருவதால் ஒவ்வொரு மூச்சு விடவும் சிரமம் ஏற்படும். எனவே, உடல் பருமனைக் குறைப்பது, மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி அவசியம்.

எங்கள் மருத்துவமனையில் இதுபோன்ற பிரச்னைகளுக்கு, ஒரு நாள் இரவு ஸ்லீப் ஸ்டடி முறை மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மூச்சுத் திறனை அளவீடு செய்து சிகிச்சை அளிக்கிறோம். நுரையீரல் சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எங்களை அணுகித் தீர்வு காணுங்கள்’ என்றார்.

குழந்தை ஆரோக்கியத்திற்கு தாய்பால் அவசியம்

 

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சபிதா ராஜேஷ் கூறியதாவது,

‘இங்கு மருந்தகம், அவசர சிகிச்சைப் பிரிவு, 24 மணி நேர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை பிறப்பு முதல் பால் கொடுப்பது, பராமரிப்பது, 6 மாதத்திற்குப் பிறகு உணவு முறை, தடுப்பூசி என்று தாய்மார்களுக்கான முழுமையான கவனிப்பும், கர்ப்பிணிகளது சந்தேகங்கள் அனைத்திற்கும் ஆலோசனையும் தீர்வும் அளிக்கப்படுகிறது. குழந்தைகளை பராமரிப்பதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன.

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கான பிரச்னைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கிறோம். குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. இரண்டு வருடம் வரைகூட கொடுக்கலாம். ஆனால் குறைந்தது ஒன்றரை வயதுவரை கொடுப்பது நல்லது. தற்போது சில தாய்மார்கள், முதல் மூன்று நாளில் பால் சுரக்கவில்லை எனக் கூறி புட்டிப்பாலுக்குச் சென்றுவிடுகின்றனர். இது தவறு. முதல் மூன்று நாளில்தான் பால் சுரக்க ஆரம்பிக்கும். ஐந்து நாட்களுக்குப் பிறகு நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். அதன்பிறகு உங்களுக்கு சந்தேகம் இருந்தால் குழந்தை பிறக்கும்பொழுது உள்ள எடையைக் கணக்கில் கொண்டு, தாய்ப்பால் கொடுத்த பிறகு எடை போட்டு பாருங்கள். கண்டிப்பாக எடை கூடி இருக்கும். குழந்தை தாய்ப்பாலை இரண்டு மார்பகங்களிலும் நன்றாக சப்பிக் குடிக்க வேண்டும். முருங்கைக் கீரை கொடுத்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், அதற்கான மருந்துகள், அக்பேஷன் தெரபி, பீச் தெரபி, கவுன்சிலிங் உட்பட அனைத்தும் எங்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. தலைக்காயம், வலிப்பு, அதிக காய்ச்சல் போன்றவற்றிற்குத் தீவிர அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பராமரிப்பு

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் பெண்கள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மகாலட்சுமி கூறியதாவது,

‘இங்கு பேறுகால வசதிகள் அனைத்தும் உள்ளன. அத்துடன், அடி வயிறு வலி, வெள்ளைப்படுதல், காப்பர் டி பொருத்துவது, எடுப்பது, மாதவிலக்கு பிரச்னைகள், கர்ப்பப்பை பரிசோதனை, குழந்தை இன்மைக்கான சிறப்பு ஆலோசனை என அனைத்தும் சிறப்பாக வழங்கப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை உள்ளது எனில், அதை உடனே சரி செய்வதற்கு இங்கு சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். மாதவிலக்கு 45 நாட்கள் தாண்டிவிட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்தால்தான் இரத்த அழுத்த அளவு, சர்க்கரை, சாப்பாடு முறை குறித்து ஆலோசனைகள் வழங்க முடியும். மேலும், கர்ப்பம் எனத் தெரிந்தவுடன் ஹெச்.ஐ.வி., தைராய்டு, ஹீமோகுளோபின், சர்க்கரை போன்றவற்றை உடனடியாகத் தெரிந்து அதற்கான விளக்கம் அளிக்கலாம்.

சாப்பாடும் அதிகமாக எடுத்துகொண்டு, பழங்கள், இனிப்பும் அதிகமாக சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை அளவுகூட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழரசங்கள் மற்றும் பாலில் சர்க்கரை போடாமலும், மதியம் முழுவதும் காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

நான்கு, ஐந்து மாதம் கடந்துவிட்டால் நடைப்பயிற்சி செல்வது நல்லது. வாந்தி வருவதற்கான அறிகுறி 75% பேருக்கு மட்டுமே. ஆறு அல்லது எட்டு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்கு செவித்திறன் நன்றாக இருக்கும். எனவே, கர்ப்பிணிகள் நல்ல இசை கேட்க வேண்டும்.

24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்காக சிறப்பு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கக் காத்திருக்கிறோம்’ என்றார்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் துல்லியமாக நோய்களை அறியலாம்!

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் அல்ட்ராசவுண்ட் கதிரியக்க ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ரம்யா சிவகுமார் கூறியதாவது,

‘அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்பது ஒன்றைக் குறித்து மிகவும் துல்லியமாக அறிய உதவும் பரிசோதனை முறை ஆகும். இதன்மூலம், கர்ப்பிணிகளின் மாதவிலக்கு அடிப்படையில், பிரசவம் குறித்தும், குழந்தை எப்போது பிறக்கும், மூன்று மாத, ஐந்து மாத ஸ்கேன்களில் குழந்தையைச் சுற்றி உள்ள முழு வளர்ச்சி உட்பட எல்லாவற்றையும் கண்டறியலாம். கர்ப்பிணிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவு. பரிசோதனைகள் செய்வது கிடையாது. வீட்டிலேயே இருக்கிறார்கள். இதுபோன்ற பரிசோதனைக்கு முன் வரும்போதுதான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

இந்த ஸ்கேன் மூலம், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அவர்களுடைய உடல் உறுப்புகளில் உள்ள தொற்று நோய்கள் குறித்தும் கண்டுபிடிக்க முடியும். இதில் ரேடியேஷன் பாதிப்பு எதுவும் இருக்காது, பாதுகாப்பானது. பொதுவான பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவற்றில் என்ன நோய் தாக்கியிருக்கிறது, கல்லீரல் நோய்கள், சிறுநீரகக் கற்கள், நீர்க்கட்டி, சிறுநீர் குழாயில் உள்ள தொற்று ஆகியவற்றையும் கண்டறியலாம்.

மது, புகைப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தை முழுமையாக அறியலாம். அதுமட்டுமல்ல, கொழுப்புச்சத்து எவ்வளவு உள்ளது என்பதையும் கண்டறிந்து, அதற்கான ஆலோசனை வழங்கப்படும்’ என்றார்.

சர்க்கரை நோயின் ‘தலைநகரம்’ இந்தியா

கோயம்புத்தூர் கணபதி கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் சிறுநீரக நோய் மருத்துவர் கோபிகிருஷ்ணன் கூறியதாவது:

’டைப் 1 சர்க்கரை நோய் என்பது குழந்தைகளை பாதிக்கும். 30 முதல் 40 வயதுடையவர்களை பாதிப்பது டைப் 2 சர்க்கரை நோய் எனப்படுகிறது. 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் சுமார் 7.5 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2030ல் 10 கோடி பேரும், 2040ல் 12.5 கோடி பேரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்தியா, சர்க்கரை நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே100 பேரில் 9 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. இதில், 40 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை.

சர்க்கரை நோயால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுகின்றது. இதற்கான மருந்துகளை எடுக்காவிட்டால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. பார்வை இழப்பு, அல்சர் போன்ற பாதிப்புகளும், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோய் ஏற்பட்டவுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்தால் இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு முறையாவது சிறுநீரகம், இரத்த அழுத்தம், சிறுநீர் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் 85 சதவீதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் சிறுநீரக பாதிப்புகள் உடலில் தெரியவரும். இதனால் இரத்தசோகை, கால் வீக்கம், உடல் சோர்வு ஏற்படுகிறது, என்றார்.

பற்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்!

கே.ஜி. ஸ்பெஷாலிட்டி சென்டரின் பல் சிறப்பு மருத்துவர் ஸ்ரீமன் நாராயணன் கூறியதாவது,

‘எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் மல்டி ஸ்பெஷாலிட்டி டென்டல் கிளினிக் செயல்பட்டு வருகிறது. இங்கு பல் சம்பந்தமான அத்தனை பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. பல்லை இழந்துவிட்டோம் என்றால் நம்மால் தெளிவாகப் பேச முடியாது. ஒழுங்கற்ற பற்களுக்கு கிளிப் போடுதல், சொத்தைப் பற்களுக்கு ரூட்கேனல், கேப் போடுதல், பிலசர் சிகிச்சை எனப் பற்களுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் உள்ளன.

பல் சொத்தை லேசாக ஏற்பட்ட உடனேயே, அடைத்துவிட்டோம் என்றால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அப்படி இல்லைஎனில் பற்களில் உள்ள எனாமலை முழுமையாக அரித்தபிறகு வந்தால் ரூட் கேனல்தான் செய்ய முடியும்.

சொத்தைப் பல் வராமல் இருக்க காலை, இரவு என இருவேளை பல் துலக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் பல் இடுக்குகளில் உள்ள உணவுகளை குச்சி வைத்து குத்தி குத்தி எடுக்கக் கூடாது. இதனால் உடனடியாக ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, எதிர்மறை விளைவுகள் அதிகரிக்கும்.

சாக்லேட், பிஸ்கட் சாப்பிடக்கூடாது. அதிக நேரம் பல் துலக்கினால், பல் வெள்ளையாக மாறாது. இதனால், எனாமல் தேய்ந்து பற்கள் மஞ்சளாக மாறிவிடும். ஈறுகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் வெளியேறும் விதமாக மேலும் கீழுமாக டூத்பிரஷைப் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.

ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை, பற்களை பரிசோதனை செய்வது அவசியம். டென்டல் பிளாஷ் செய்துகொள்வதும் நல்லது. ஆரோக்கியமான உணவு எடுக்க வேண்டும். அதிக குளிரான, அதிக சூடான பொருட்களை சாப்பிடக் கூடாது.

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முன்னதாக பற்களை முழுமையாக பரிசோதனை செய்வது நல்லது. அந்தக் காலத்தில் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி கொண்டு பல் தேய்த்தார்கள். அந்தக் குச்சிகளைத் தவறாகப் பயன்படுத்தினால், ஈறு வீக்கம் ஏற்படும். எனவே, நவீன பேஸ்ட், பிரஸ் பயன்படுத்தி பற்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

மேலும் தகவல்களுக்கு 0422 4012345, 0422 4012340

தொலைபேசி எண் 80980 22226, 80989 66660

மின்னஞ்சல் (Email) : kgsc@kghospital.com