தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம், கோவை மாவட்டத்தில் முள்ளில்லா மூங்கில் நட்டு வளர்க்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்புவிடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது: தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் முள்ளில்லா மூங்கில் நட்டு, விவசாயிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறலாம்.
அரசு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களுக்கு மூங்கில் நட, 100 சதவீதம் மானியத்திலும், விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்திலும், மூங்கில் செடிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மூங்கில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசன வசதி மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.