ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினக் கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ‘உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்’ காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.பழனியம்மாள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் தெருக்கூத்து நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வலியுறுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் ஆர்.நாகராஜன், எம்.செந்தில்குமார், ஆ.சுபாஷினி ஆகியோர் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.