கோவை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வந்த 2 கார்கள் மோதல்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மேம்பாலம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடியது. வேன்கள், கார்கள் என பல வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதனை அடுத்து சிறுது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு நிலவியது.