மார்ச் 27 பிரதமர் மோடி சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தை, திறந்து வைப்பதற்காக வரும் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது.

முதல் தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கமான நடைமுறைகள், இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம், ஐந்து தளங்கள் இந்த அமைகின்றன.

அடுத்த மாதம் திறக்கப்பட இருந்த நிலையில், பிரதமரின் நேரம் கிடைத்திருப்பதால், வரும் 27ம் தேதி, புதிய முனையம் திறப்பு விழா நடக்கிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டில்லியில் இருந்து 27ம் தேதி காலை ராமேஸ்வரம் வரும் பிரதமர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து, சென்னை வருகிறார்.