வேறுபாட்டின் அடிப்படையில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

வடமாநில தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாட்டில் உள்ள எந்த மக்களும் வேறுபாட்டின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடாது என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அவர் பேசும்போது: சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

வடமாநில தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் சாதி மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது. நேரடியாக பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களை தான் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள எந்த மக்களும் வேறுபாட்டின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை வாய்ப்பு வரும்போதெல்லாம் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்பு பெரியதாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மத்திய மத்திய அரசின் திட்டங்கள் என்று பெயர் வெளியே வராத வகையில் தமிழக அரசு அதனை தடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறினார்.