நா. கார்த்திக்கை நேரில் சந்தித்து, நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ள கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்கை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.

சிகிச்சைக்கு பிறகு தற்போதைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், மிகவும் பாதுகாப்புடன் இருக்குமாறும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.