நேரு கல்லூரி சார்பில் சிறந்த ஆசிரியர் விருது

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களையும் முதல்வர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நேரு கல்வி குழுமத்தின் சார்பாக சிறந்த ஆசிரியர் விருது நிகழ்ச்சி தொடர்ந்து ஏழாம் ஆண்டாக நடந்தது. நிகழ்ச்சியை நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ண தாஸ் தொடங்கி வைத்தார். நேரு கல்விக்குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண குமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி பூபதி, கௌரவ விருந்தினராக பொள்ளாச்சி வட்டம் ஆரோக்கியா மாதா பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ஜீஸ் மரியா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

இந்த வருடம் 74 விருதாளர்களை தேர்வு செய்து அதில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது 70 பேருக்கும், சிறந்த முதல்வருக்கான விருது கோயம்புத்தூர், டிவி சேகரன் நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரமிலா தேவி, திருப்பூர், ஜெயந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சேகர் குமார் மற்றும் தேனி, மேரி மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர், சீனு எம் ஜோசப் ஆகிய மூன்று பேருக்கும்,

மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது பீளமேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்டது.