கே.பி.ஆர். பொறியியல் கல்லூரிக்கு பணிபுரிய சிறந்த இடத்திற்க்கான சான்றிதழ்

கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “பணிபுரிய சிறந்த இடம்” என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் முதல்வர் அகிலா கூறுகையில்: எங்கள் பலம் எங்கள் பணியாளர்களிடமிருந்து வருகிறது என நம்புகிறோம், மேலும் வேலை செய்வதற்கான சிறந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். வரும் காலத்திற்க்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தனித்து நிற்பதற்கும் உறுதிபூண்டுள்ள ஒரு அணியை உருவாக்கியதில் பெருமையடைகிறோம் என்றார்.

கே.பி.ஆர். நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி பேசுகையில்: எங்கள் ஊழியர்கள் மிகப்பெரிய சொத்து என்று நம்புகிறோம், மேலும் அவர்களின் முழு திறனையும் அடைய அவர்களுக்கு அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “கிரேட் பிளேஸ் டு ஒர்க்” சான்றளிக்கப்பட்ட விருதைப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.