கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கல்லூரிக்கனவு களப்பணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, அரசு பள்ளி மாணவ மாணவியர்களிடையே உரையாற்றினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, பொது நூலக இயக்குநர் இளம்பகவத், முதன்மை கல்வி அலுவலர் பூபதி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி செயலர் கண்ணையன், பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் பிருந்தா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.