பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க கோவை ராஜ வீதியில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் கழக பொருளாளர், மக்களவைத் திமுக குழு தலைவர் டி.அர்.பாலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக கழகப் பேச்சாளர் ஈரோடு சத்தியவதி, கோவை மாநகர மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர்க்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.