எஸ்.என்.எஸ் கல்லூரியில் தொழில்நுட்ப நிறுவனம் துவக்கம்

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்னாபி சொல்யூசன்ஸ் மற்றும் டெலாடோ சொல்யூசன்ஸ் என்ற இரண்டு புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

அப்ளிகேஷன் டெவலப்மென்ட், யு1/யுஎக்ஸ் டிசைனிங் என பல பிரிவுகளைக் கொண்ட இந்த நிறுவனங்கள் எஸ்.என் எஸ். ஜ ஹப் என்னும் தொழில் முனைவோருக்கான சிறப்பு குழுவின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு பல சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

செயல்தலைவர் மோகன் நாராயணன், கல்லூரியின் துணை முதல்வர் சுதாகரன், கணினி பொறியியல் துறையின் தலைவர் சங்கீதா என கல்லூரியின் முக்கிய நபர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.