ரயில்வேதுறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1,05,905 கோடி வருவாய்

இந்திய ரயில்வேதுறை சரக்கு போக்குவரத்து மூலம் நவம்பர் 2022 வரை ரூ.1,05,905 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே கடந்த நிதியாண்டின் காலகட்டத்தைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை 978.72 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 8 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில்  903.16 மெட்ரிக் டன் அளவிற்கு சரக்குகளை கையாண்டு ரூ.91,127 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், நடப்பாண்டில் 16 சதவீதம் அதிகமாக ரூ.1,05,905 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2022 நவம்பர் மாதத்தில் மட்டும் 123.9 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Source: pib