பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் தின விழா கோவை நியுசித்தாபுதூர் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தைகள் அனைவருக்கும் புத்தகங்கள், எழுதுபொருட்கள், வண்ண பென்சில்கள், பிஸ்கட், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஆன்மீக – தன்னம்பிக்கை எழுத்தாளர் மண்ணை மாதவன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுபொருட்களை வழங்கி சிறப்பித்தார். மேலும், நிர்வாகிகள் கெளரி சங்கர், கார்த்திக், தமிழரசன், பிரதீப் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் குழந்தைகளுக்கு நடனம், மாறுவேடம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.