கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியில் மனநல தின கொண்டாட்டம்

கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியில் உலக மனநல தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் பல கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்குபெற்றனர்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கார்த்திக் பாபு வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச்மருத்துவமனையின் மனநல மருத்துவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது உரையில், மனநலத்தின் முக்கியத்துவத்தையும், மீள்தன்மை மற்றும் உற்பத்தித்திறன், மாணவர்கள் தொடர்பான மனநலப் பிரச்சனைகள் மற்றும் தகுந்த நடவடிக்கைகளுடன் எவ்வாறு சமாளிப்பது போன்றவற்றை மாணவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் விளக்கமாக விளக்கினார்.

இறுதியாக கல்லூரியின் துணை முதல்வர் கல்பனா நன்றியுரை வழங்கினார்.