தானிஷ் அஹமது கல்லூரிக்கு விருது

கோவை தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரி தேசிய அளவில் சிறந்த இன்குபேஷன் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கான விருதினை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த விருதை புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

கல்லூரியின் தலைமை செயல் நிர்வாக அதிகாரி தமீஸ் அஹமது, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறைத்தலைவர் சீனிவாசன் இவ்விருதினை பெற்றுக் கொண்டனர். விருதினை பெற்றதற்காக கல்லூரியின் நிறுவனத்தலைவர் அக்பர் பாஷா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.