பேரறிஞர் அண்ணா புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க கோரிக்கை

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன், பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவரே பேரறிஞர் அண்ணா தான் என தெரிவித்த அவர், தமிழக முதல்வரும் தங்களது இந்தக் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.