கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தொழில்நுட்ப துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாநில அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு விளக்கினார்.

மேலும் தனது சமூக வலைதள பக்கங்களை தொடர்ந்து பின் தொடருமாறு கூறிய அவர், மாநில அளவில் இத்துறையின் சார்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.