முதல்வர் இன்று கோவை வருகை: 3000 போலீசார் பாதுகாப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையிலிருந்து கோவை வருகை தர உள்ளார். கோவையில் சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், நாளை காலை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் நடைபெறவிருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சி மெயின் ரோடு, விழா நடக்கும் இடம் மற்றும் ஆட்சிபட்டி கட்சி விழா பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை விழா நடக்கும் பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்வர் வருகையால் விழா நடக்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்தல், நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்கள் வந்து செல்ல வழிவகை செய்தல் போன்ற பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும், முதலமைச்சர் மத்தியம் மக்கினாம்பட்டியில் தங்கும் அவர், ஆட்சிப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்க உள்ளார்.