கேரளாவிற்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா வேண்டுகோள்

கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கனமழை தொடரும் என்பதால்,

கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் யாரும் அந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது போல் கேரளாவுக்கு யாரும் சுற்றுலா பயணிகள், வெளிமாவட்ட தோட்ட தொழிலாளர்கள் வர வேண்டாம் என்றும் கேரள அரசு கேட்டு கொண்டுள்ளது. கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை போடப்பட்டது.