கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை

கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக  தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை குற்றாலம் நீர் பிடிப்பு  பகுதயில் இரண்டு நாட்களாக பலத்த  மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் மீண்டும்  முழு கொள்ளளவை எட்டவுள்ளது .