சுகுணா பிப் பள்ளி மாணவி ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வில் முதலிடம்

கோவையில்  உள்ள சுகுணா பிப் பள்ளி மாணவி ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை.

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, ஜேஇஇ என்ற  நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த  முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றவர்கள் என்.ஐ.டி. ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி பெற்றவர்கள்.

இதற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம். இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வை 7 லட்சத்து 69 பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில்,  கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சாதனை படைத்த மாணவி தீக்‌ஷா திவாகர் கூறியதாவது, “தேர்வு கடினமாக இருந்தாலும், நான் கண்டிப்பாக அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது. என்னுடைய இந்த சாதனைக்கு  எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர்.

சுகுணா பிப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.  இதில், பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி, சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்  ஆகியோர் கலந்து மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.