ஆதரவற்றோருக்கு மதிய விருந்து – விக்னேஷ் சிவன் நயன்தாரா

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஆதரவற்ற இல்லங்களில்  ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சென்னையை அடுத்த மகாபலிபுரம் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் நேற்று முதல் திருமண நிகழ்ச்சிகள் களை கட்டி வருகிறது.

இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்து முறைப்படி நடிகை நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் திருமணத்துக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் நயன்தாரா திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருமண விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி  மதிய விருந்து அளிக்கின்றனர்.