உணவு பாதுகாப்பில் தமிழ் நாடு ஃபஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்த இந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக, பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் உணவு பாதுகாப்பு குறியீட்டில்  தமிழ்நாடு முதலிடம் பெற்றுவருகிறது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்காக உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் பட்டியலை ஆண்டுதோறும் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில்தான் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை முந்தி, தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்தது. மேலும், இந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் காரணம் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என்றார்.

இதுக்குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில்,”மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என்று WorldFoodSafetyDay-ல் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.