தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 43-வது வருடாந்திரப் பட்டமளிப்பு விழாவிற்கு கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர்களிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இப்பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnau.ac.in மூலம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள இணைப்பு (link) மூலம் ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணத்தை SBI collect (The Comptroller, TNAU, Coimbatore) மூலம் கணக்கில் செலுத்த வேண்டும்.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் (அதாவது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழின் (PC) நகல், இறுதி பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல் (ஒன்று மட்டும்), இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான ரசீது மற்றும் சமீபத்தில் எடுத்த புகைப்படம் (2nos) ஆகியவற்றை ஜூன் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் இதுசம்பந்தமான விவரங்கள் அறிய விரும்புவோர் 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.