ஏப்ரல் 9 ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் பொது கூட்டம் – நா.கார்த்திக் அறிவிப்பு

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழக பெறுப்பாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.

திமுக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும், வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்தும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.

இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் முனைவர் சபாபதி மோகன்  மற்றும் மதுரை  அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.