நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வுக்கூடங்கள், ஆற்றல் பவுண்டேஷன் சார்பில் சீரமைத்து புதுப்பித்து ஒப்படைக்கப்பட்டது.
மாணவர்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி மன்ற நிர்வாகிகள், ஆற்றல் பவுண்டேஷன் தலைவர் ஆற்றல் அசோக்குமார் முன்னிலையில் மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் தலைமையாசிரியர் சரஸ்வதி, நகராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், நகராட்சி மன்ற துணை தலைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் செளதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சத்துணவு கூடம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் தேவி மற்றும் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.