தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் சிறப்பு இடஒதிக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டபடிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (23.02.2022) நடைபெற்றது என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யானசுந்தரம் தெரிவித்தார். பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துகொண்டு கலந்தாய்வில் பங்குபெற்றவர்களை வாழ்த்தினர்.

இதில் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வில் சசி, ஆர்த்தி, சுப்ரியா ஆகியோர் முதல் மூன்று இடத்தைப் பிடித்தனர்.

சந்தோஷ், லிங்கேஸ்வரன், யோகராஜ் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் ஷிவானி, முஹம்மது சாத், சிந்தியா ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் பெற்று, மாணவர்கள் கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.