வேலம்மாள் மாணவி ‘ராபா’ சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை

போரூர், காரம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் மாணவி ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

வேலம்மாள் வித்யாலயா, பள்ளியின் UKG -வகுப்பைச் சேர்ந்த அனன்யா ஸ்ரீ பல்வேறு மொழிப் பாடல்களைப் பாடிக்கொண்டே அபாகஸ் மனக்கணக்கு உத்தியைப் பயன்படுத்தி 75 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குத் தொகைகளைத் தீர்த்துள்ளார்.

இதன்மூலம் இவர் ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையொட்டி வேலம்மாள் பள்ளி நிர்வாகம் அவரது அசாதாரண கணிதத் திறன்களைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்தது. இவ்விழாவில் அவருக்கு ‘இளம் மேதை ‘ என்று முடிசூட்டப்பட்டது.