ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திமுகவினர்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் விழா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலாளர் சி. ஆர். ராமச்சந்திரன் தலைமையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மீனா ஜெயக்குமார் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. தொண்டரணி அமைப்பாளர் ராஜலட்சுமி செந்தில் குமார் ஏற்பாட்டில் பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள போஸ்டல் காலனி அன்பு இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதில் மகளிரணி மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.