எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில் இலவச பிசியோதெரபி கிளினிக்

சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் பிசியோதெரபியில் இலவச பிசியோதெரபி கிளினிக் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

சம்பத் மருத்துவமனை, தலைவர், டாக்டர் பிரபு மையத்தை திறந்து வைத்தார். முன்னாள் தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் முன்னிலையில் விழா தொடங்கியது.

எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் செந்தூர்பாண்டியன், சார்லஸ், கார்த்திகேயன், கவிதா, துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

சரவணம்பட்டி, குரும்பபாளையம், கோவில்பாளையம், வழியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முகாமில் பயனடைந்தனர்.