பொம்மை செய்யும் கலைஞர்களுடன் தீபாவளி கொண்டாடிய வானதி சீனிவாசன்

கோவை மாவட்டத்தில் காகிதம் மற்றும் மண்ணாலான பொம்மைகளை செய்யும் கலைஞர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். அவர்கள் கோவை சேத்துமா வாய்க்கால், செல்வபுரம், மாதம்பட்டி போன்ற பகுதிகளில் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்த பொம்மை கலைஞர்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி அவர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கி போயின. தற்போது அவர்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொம்மை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சுமார் 50க்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்களுடன் இணைந்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அவர்களுக்கு வேஷ்டி, சேலைகள், இனிப்புகள், பட்டாசுகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.