வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் ராகிங் விழிப்புணர்வு

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகையை ஒட்டி மூத்த மாணவர்களுக்கு ராகிங் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை உரை வழங்கினார். அவர் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், நட்பின் அவசியம் குறித்தும் பேசினார்.

நிகழ்விற்கு குனியமுத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேல்முருகன் சிறப்புரையாளராக பங்கு பெற்றார். அவர் தனது உரையில் ராகிங் செய்வதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். பல்வேறு வகையான ராகிங் குறித்தும், அதற்கு உரித்தான போக்ஸோ சட்டம் குறித்தும் விவரித்தார்.

இந்நிகழ்வு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது. கல்லூரியின் துணை முதல்வர் வாசுதேவன் வரவேற்பு வழங்கினார்.