கதர் ஆடைகளை வழங்கி காந்தி ஜெயந்தி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கதர் ஆடைகள் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ரயில் நிலையம் அருகே உள்ள அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கதர் ஆடைகளை வழங்கி, காந்தியடிகள் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.