ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலகத்தொழில் முனைவோர் தினம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் புத்தாக்க மையம் சார்பில் உலகத் தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்பட்டது.

அதை முன்னிட்டு தொடர் நிகழ்வுகளாக தொழில்முனைதலில் சூழல் பாதுகாப்புக் குறித்த போஸ்டர்களை உருவாக்குதல், பெண் தொழில் வல்லுனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த குழு விவாதம், தொழில் தொடங்கும் போது சந்திக்கும் வெற்றி, தோல்விகள் குறித்த உரையரங்கம், தொழில் முனைவோர் சந்திக்கும் தடைகளும் வாய்ப்புகளும் குறித்த உரையாடலோடு கல்லூரி வளாகத்தில் மாணவியர் தொழில் தொடங்க உதவும் வாய்ப்புகள் குறித்த வீடியோ உருவாக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் பங்கேற்ற மாணவியரையும் படிக்கும்போதே தொழில் முனைவோராக உள்ள மாணவியரையும் கல்லூரி முதல்வர் சித்ரா பாராட்டி விருது வழங்கினார்.

முன்னதாக இக்கல்லூரியில் ‘வணிகவைபவ்’ என்ற கல்லூரி மாணவியருக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டக் கற்றுத் தருவது குறிப்பிடத்தக்கது.