திருச்சி சாலையில் மரம் விழுந்ததின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதுடன் லேசான மழை பெய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்று லேசான மழை பெய்த நிலையில் திருச்சி சாலை அரசு மருத்துவமனை அடுத்து தர்கா எதிரே உள்ள மரம் வேறோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேறோடு சாய்ந்து விழுந்த மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக யாரும் இல்லாத காரணத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து அவசர மீட்பு ஊர்தியில் வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ரம்பம் கொண்டு அரை மணி நேரத்தில் கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினர்.மரம் விழுந்ததின் காரணமாக சிறுதி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.