கோவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம்

கோவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

காலை 11 மணிக்கு கோவை விமான நிலையத்திற்க்கு வருகை தரும் அமைச்சர், காலை 11.30 முதல் 11. 45 வரை சின்னியம்பாளையத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார்.

மதியம் 12.15 முதல் 12.35 வரை தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியான வாளையார் பகுதியில் ஜிகா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து விழிப்புணர்வு மேற்கொள்கிறார்.

12.45 முதல் 1 மணி வரை வாளையார் சோதனை சாவடி மற்றும் மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொள்கிறார்.

மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை விரிவான முதலைமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவன்மைகளுமான கொரோனா தடுப்பூசி தேவைகள் குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இடம் : கே.எம். சி.ஹெச் கலையரங்கம்.

மாலை 4.30 முதல் 5.00 மணிவரை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல். தடுப்பூசி முகாமுக்கு செல்கிறார்.

மாலை 5.15 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.