ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் வரவு அதிகரிப்பு!

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மலை பிரேதசம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு சுற்றுலா தலங்களுக்கு கொரோனா நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகையின் இதமான காலநிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தியும் கூடியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாய் இன்றி தவித்து வந்தன. இதனை அடுத்து ஹோம் மேட் சாக்லேட் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் அதன் தயாரிப்புப் பணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

SOURCE: DAILY HUNT