கோவை கோவிட் எய்ட் அமைப்பு நடத்திய தடுப்பூசி முகாம்

கோவையை சேர்ந்த கோவிட் எய்ட் என்ற அமைப்பு, கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் குடும்ப நலத் துறையுடன் இணைந்து, இலவச தடுப்பூசி முகாமை செவ்வாய்க் கிழமை (06.07.2021)நடத்தியது.

கோவை கோவிட் எய்ட் அமைப்பு தமிழ்நாட்டின் கோவையில் உள்ள மாணவர்களால் நடத்தப்படுவது. இவர்கள் கோவை மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கோவிட் நிவாரண மற்றும் உதவி நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்கள்.

கவுண்டபாளையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் இப்பகுதியில் வசிக்கும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர் வர்க்க மக்களுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்பட்டது.