வயது அவருக்கு தடையில்லை!

-டாக்டர் எஸ். ராஜசேகரன், தலைவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத் துறை, கங்கா  மருத்துவமனை

ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்தையின் பங்களிப்பு அளவிட முடியதாக ஒன்றாக இருக்கும். தாய், தந்தை என்ற இரண்டு தூண்களில் தான் குடும்பம் செயல்படுகிறது. அதில் அப்பாவின் உடைய பங்களிப்பு  மிகப்பெரியது.

அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். ஒவ்வொரு சாதனைக்கு பிறகும், அடுத்த செயலுக்கான முயற்சி என்ன என்று யோசிப்பார்.

கங்கா மருத்துவமனையை நிறுவிய என் அப்பா டாக்டர் சண்முகநாதன் இன்றளவும் மருத்துவமனைக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் அதிக ஈடுபாடு கொண்டு  அவரது  79 வயதில், பாரதியார் பல்கலையில் தமிழ் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பித்து, தினமும் இரவு தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது 82 வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார்.

எந்த நிலையிலும் வயது அவர் செய்ய நினைக்கும் காரியத்தை தடுத்ததில்லை. வயதை ஒரு அனுபவமாக வைத்துக் கொண்டாரே தவிர, அதை ஒரு தடையாக அவர் கருதவில்லை.

இன்று வரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார். தற்போது 85 வயதாகும் அவர், இப்போதும் படித்து கொண்டு தான் இருக்கிறார். காலையில் சீக்கிரம் எழுவது, நடைபயிற்சி மேற்கொள்வது, படிப்பது, தமிழ் பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதுவது என இன்று வரை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்.