எனக்குள் உந்துதலை ஏற்படுத்தியவர்  !

-டாக்டர் ஆர்.வி. ரமணி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், சங்கரா கண் மருத்துவமனை

கட்டிடத்தின் அஸ்திவாரம் எப்படி வெளியே தெரியாமல் கட்டிடத்தை தாங்கிப் பிடிக்கிறதோ, அதுபோலத்தான் பல சமயங்களில், ஒரு குடும்பத்தில் தந்தையின் பங்கேற்பும் வெளியே தெரிவதில்லை. மேலே உள்ள அழகான கட்டிடங்கள் தெரியுமே தவிர அஸ்திவாரம் தெரியாது. அது போன்று தான் அவருடைய பங்கேற்பும் இருக்கும்.

ஒரு தொழிலில் உழைத்து பொருள் ஈட்டி, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து முழு குடும்பத்தையும் மேலே கொண்டு வர முடிவது அவரது தளராத உழைப்பின் காரணமாக தான்.

அப்பாவுக்கு, குழந்தைகள் மேல் அளவிடமுடியாத ஆசையும், அன்பும் இருக்கும். வெளியில் அவ்வளவாக சொல்லி காட்டவில்லை என்றாலும் அளவிட முடியாத அன்பை வைத்திருப்பார்கள்.

மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டு அதில் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதல் என் தந்தையார் டாக்டர் எ. ராமநாதனிடம் இருந்து தான் எனக்கு வந்தது. என் அப்பாவின் கார் எங்கள் வீதியில் நுழைந்தால் திண்ணைகளில் அமர்ந்துள்ளவர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள்.

கூட்டுக்  குடும்பமாக இருந்த நம் கலாச்சாரம், மேலை நாட்டு கலாச்சாரத்தை கண்டு தனி குடும்பமாக தனித்து வாழ்கின்றனர்.  சிறுவயதில் இருந்து நம்மை ஆளாக்கியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் பிள்ளைகளுக்கு உள்ளது எனவே வயதான தாய், தந்தையரை கடைசி வரை வைத்து காப்பற்ற வேண்டும். அவர்களின்  மதிப்பு அளவிட முடியாதது.