– வைஷ்ணவி கிருஷ்ணன், இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
எனக்கு என் அப்பாதான் முதல் ஹீரோ. மிகவும் அமைதியானவர், நல்லவற்றை எந்நாளும் சொல்லித்தந்தவர், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர், இறைவன் நமக்கு கொடுத்ததை வைத்து நன்றியுடன் மகிழ்ந்திட வேண்டும் என சிறுவயதிலிருந்து கற்றுத்தந்தார்.
ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார், ஆனால் அவரின் வார்த்தைகளை விட அவரின் செயல் மிக சத்தமாக பேசும். அவரை பார்த்து நான் பலவற்றை வாழ்க்கையில் கற்றுள்ளேன்.
வாழ்க்கையில் நான் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் போது, எனக்கு பலம் தந்தவராக மட்டுமில்லாமல், எதை செய்தாலும் அதை சரியான வழியில் செய்யவேண்டும் என எனக்கு சொல்லி தந்து எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்துவருகிறார்.
இந்த சிறப்பான நாளில் என் இனிய அப்பாவிற்கும், அனைத்து தந்தைகளுக்கும் இறைவன் வளமும், நலமும் தர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.