அனைவரிடமும் ஒரே மாதிரி பழக கூடியவர்

-நந்தகுமார், உரிமையாளர், செல்வம் ஏஜென்சிஸ்

எனது தந்தை  துரைசாமி ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரியான அவர் தனது படிப்பை முடித்தவுடன் தொழில், விவசாயம், கூட்டுறவாளர், ஆன்மீகவாதி, கல்வியாளர் என பல பொறுப்புகளை வகித்து உழைப்பை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டிருந்தார். அவர் விட்டுச்சென்ற ஆன்மீகம் மற்றும் கல்வி பணிகளை நானும் தொடர்ந்து அவர் வழியில் செய்து வருகிறேன்.

அனைத்து மனிதர்களிடமும் ஒரே மாதிரியாக பழககூடிய அவர் அந்த பண்பை எனக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். நான் வெற்றி பெரும் சமயங்களில் அவர் என்னிடம் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் தன் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி சந்தோஷப்படுவார்.

தந்தையுடன் ஏற்படும் மன நெருடல்களை  இளைஞர்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் தரும் அறிவுரைகளை ஏற்று, பின்னாளிலே அவர்களை பின்பற்றி வாழ வேண்டும்.