பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சித்தாபுதூர் பகுதியில் இன்று (16.06.2021) நடைபெற்று வருகிறது.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கோவையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது .

மேலும் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது

சித்தாபுதூர் அரசு மாநகராட்சி பள்ளியில் இன்று ஒரு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் பலரும் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும் என்றும் இன்று 500 ஆசிரியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.